புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் மர்மமான முறையில் மாயம் - தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

வவுனியாவில் கடந்த மாதம் நீர்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த சிறுமியின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தமாதம் வவுனியா நெளுக்குளம் பகுதியைசேர்ந்த சிறுமி ஒருவர் கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்து உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சிறுமியின் சடலம் மரணவிசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது வீட்டில் இறுதிச்சடங்குகள் இடம்பெற்று இராசேந்திரங்குளம் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடக்கின்ற நிலையில் அவரது சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் காவல்துறை மற்றும் தடயவியல்  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.