அமெரிக்கா மீது தொடர்ந்து குறிவைக்கும் இஸ்லாமிய அமைப்பினர் : மற்றுமொரு அமெரிக்க விமானத்தளமும் தாக்கப்பட்டது!


ஈராக்கின் அஜ்ன் அல் அசாத்தில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் விமானத்தளம் மீது, ஈராக்கை சேர்ந்த இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் என்ற அமைப்பினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலிற்குப் பொறுப்பேற்ற ஈராக்கில் உள்ள இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் என்ற அமைப்பு, இஸ்ரேலிற்கு அமெரிக்கா ஆதரவிப்பதாலேயே அமெரிக்க விமானத்தளம் தாக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

ஈராக்கின் மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஐன் அல்-அசாத் என்னும் இடத்தில், அமெரிக்க இராணுவத்தின் விமானத்தளம் ஒன்று அமைந்துள்ளது, சதாம் உசேன் காலத்தில் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கப் படைகள் அதன் பின்னர் அங்கிருந்து விலகிய பிறகும் ஒரு சில தளங்களை அமெரிக்க துருப்புகள் இன்னமும் ஆக்கிரமித்துள்ளன, அவற்றில் ஒன்று அஜ்ன் அல் அசாத் விமானத்தளம். 

இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பற்றுள்ள குறித்த அமைப்பினர், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவுக்கு எதிராகவே இந்தத் தாக்குதலை நாங்கள் நடத்தி உள்ளோம். அமெரிக்காவுக்கு எதிரான எங்களது தாக்குதல் மேலும் தொடரும்” என இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் அமைப்பு பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

 ஆளில்லா விமானங்களைக்கொண்டு ஈராக்கிலுள்ள அஜ்ன் அல் அசாத் அமெரிக்க விமானத்தளத்தின் மீது திடீர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அமெரிக்க விமானப்படை தளத்தின் இலக்குகள் துல்லியமாக தாக்கபட்டுள்ளன.

இதற்கு முன்னரும், இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய கிழக்கில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்காவின் விமானந்தாங்கி போர்க்கப்பல் மீது இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியது.

மத்திய சிரியாவில் இருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் தொடுக்கப்பட்ட தாக்குதலை அமெரிக்கா எதிர்கொண்டு, பின்னர் விமானப்படைகளை ஏவி சிரியாவில் இருக்கும் ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்களின் நிலைகள் மீது அண்மையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.