மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு அவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் துப்பாக்கிச் சூடு இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், தற்போது மூன்று விசேட விசாரணைக் குழுக்கள், மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது.