தென்னாபிரிக்காவின் நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து பெரும் தீப்பிழம்புகள் வெளியேறிதையடுத்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை அத்தோடு தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலில் பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் அரசு இறுதி ஊர்வலம் நடந்து சில மணிநேரங்களுக்குப் பின்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.