யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பௌர்ணமி நாளான இன்று (13) விகாரை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், பொது மக்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் அவர்கள் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ”வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “எமது நிலம் எமக்கு வேண்டும்“, ”சட்டவிரோத விகாரையை உடனே அகற்று”, “சட்டவிரோத விகாரைக்கு பொலிஸ் பாதுகாப்பு”, “பொலிஸ் அராஜகம் ஒழிக“ போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை கடந்த மாதமும் குறித்த பகுதியில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.