நீங்கள் சொல்வதை கேட்டு தான் தமிழர்கள் வாழ வேண்டுமா! சபையில் கடும் வாக்குவாதம்


நீங்கள் சொல்வதை கேட்டு தான் தமிழர்கள் வாழ வேண்டும் என நீங்கள் எல்லோரும் பேசுவது மிக மிக மோசமான நிலைமை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(09.08.2023) உரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், இன பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமா? இல்லையா என்பதில் எத்தனை சிங்கள தலைவர்கள் தெளிவாக இருக்கின்றீர்கள்.

முழுமையாக இந்த நாட்டில் ஒரு தீர்வு வரக்கூடாது என்று சிலர் தெளிவாக இருக்கிறார்கள்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட அனைத்து தமிழ் மக்களிடமும் நீங்கள் ஒரு பொதுசன வாக்கெடுக்க தயாரா? தமிழர்களுக்கு சமஷ்டி முறையில் ஓர் தீர்வு வேண்டாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.