பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் தேசியவாதி என கூறப்படுவதை தன்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
சுமந்திரன் சிங்கள தலைவர்களுடன் ரகசியமாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கின்றனார்.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு தன்னை ஒரு தமிழ் தேசியவாதி என வெளிக்காட்ட சுமந்திரன் முயற்சிக்கின்றார்.
சுமந்திரனின் இவ்வாறாக இரு பக்க நடவடிக்கைகள் காரணமாக தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.
அத்தோடு, தற்போது தமிழரசுக் கட்சியின் தலைவராக இருக்கும் சிறீதரன், யுத்த காலங்களில் எந்தவித பங்களிப்புமின்றி, ஒளிந்திருந்ததாகவும் தற்போது தமிழ் தேசிய பற்றி பேசுவதாகவும் கருணா அம்மான் மேலும் தெரிவித்தார்.