இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான படம் 'மாநாடு' . இதில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜெ சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் வெற்றி திரைப்படமாக ஆனது. நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு திரைப்பிடிப்பில் சிம்பு இருந்ததால் சமீபத்தில் நடந்த வெற்றி விழாவில் கலந்துகொள்ளவில்லை. ஜனவரி 6 ஆம் திகதி சென்னையில் தனது ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார் சிம்பு. இந்நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரோன் பரவல் காரணமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில் ரசிகர்களுடன் கொண்டாடும் வெற்றி விழா கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            