தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில் சம்பந்தன் ஆதரவாளர்கள் செய்த ‘முசுப்பாத்தி’

தமிழரசுக் கட்சியின் தலைவர்; தேர்தலின்போது இடம்பெற்ற ஒரு ‘முசுப்பாத்தி’ பற்றித்தான் தற்பொழுது கட்சியினர் தமக்குள் பேசிச் சிரிக்கின்றார்கள்.

(‘கட்சியில் நடப்பது எல்லாமே ‘முசுப்பாத்திதானே..’.. அந்த முசுப்பாத்திகளைப் பார்த்துத்தானே ஊரே பேசிச் சிரித்துக்கொண்டிருக்கின்றேதே..’ என்று உங்கள் ‘மைன்ட் வொயிஸ்’ பேசுவது எங்களுக்கு தெளிவாகக் கேட்கின்றது..)

சிறீதரனுக்குச் சார்பாக தேர்தலில் வாக்களிக்க தனக்கு விசுவாசமான ஆறு நபர்களை வழங்கியிருந்தாராம் சம்பந்தன்.

சம்பந்தனின் அந்த ஆறு விசுவாசிகளில் நால்வர் சுமந்திரனுக்கு வாக்களித்துவிட்டு, தமது முகப்புத்தகத்தில் சுமந்திரனுக்கு தாம் வாக்களித்ததாக பெருவிரலை உயர்த்தி போஸ்கொடுத்து பதிவுபோட்டுள்ளார்களாம்.

‘சம்பந்தரனைப் போலவே அவரது ஆதரவாளர்களும் களண்ட கேசுகள் தானா..’ என்று கூறிச் சிரிக்கின்றார்களாம் கட்சி உறுப்பினர்கள். பேந்தென்ன.. ஊரே சிரிக்கேக்க கட்சிக்காரர்கள் சிரிக்கமாட்டார்களா??