யாழில் இரு பெண்கள் மீது வாள்வெட்டு : இளைஞன் எடுத்த விபரீத முடிவு


யாழ்ப்பாணம் - இளவாலை (Jaffna - Ilavalai) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு இளைஞரொருவர் தற்கொலை செய்துள்ளார்.

குறித்த சம்பவமானது, இன்று (16.04.2024) அதிகாலை பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காயமடைந்த தாயும் மகளும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital Thellippalai) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்ற 37 வயதான இளைஞன் அப்பகுதியில் உள்ள காணியொன்றில் தற்கொலை செய்து உயிரை மாயத்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த இரண்டு சம்பவத்திற்கும் காதல் விவகாரமே காரணம் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.