நாட்டில் நிலவும் அனைத்து பொருளாதார பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம்-நாமல்!

நாட்டில் நிலவும் அனைத்து பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பேருவளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.போராட்டப் பகுதியில் வழங்கப்பட்ட போதைப்பொருள் பாவனையால் சிறுவர்கள் தற்போது அதற்கு பழகிவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.