வரவு செலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக மாறியுள்ள அரச நிறுவனங்களை, ஹோல்டிங் நிறுவனம் மூலம் பங்குச் சந்தையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற இலங்கை பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை கட்டமைப்பு ரீதியாக மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை திருத்தங்களுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும்,
மேலும், இந்த ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று தான் எதிர்ப்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று தான் எதிர்ப்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.