தென் கொரியாவில் கோர விபத்து..! இலங்கையர் உட்பட 151 பேர் உயிரிழப்பு - வெளியான பின்னணி

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த குறித்த இலங்கையர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஸ்மாயில் முனவ்ஃபர் என்ற 27 வயதான ஆண் ஒருவரென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை நேரப்படி நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹாலோவீன் கொண்டாட்டத்துக்காக நகரின் பிரபலமான இரவு வாழ்க்கைப் பகுதியான Itaewon இல் பெரும் கூட்டம் கூடியதால் மக்கள் நெரிசல் ஏற்பட்டது.

அதேவேளை, ஹாலோவீன் பண்டிகையின் போது ஏற்பட்ட பேரழிவுக்கு தமது சோகத்தை தெரிவித்துள்ள தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் யோல் தேசிய துக்கக் தினமாக பிரகடனம் செய்துள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.