அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கிய இலங்கை - காத்திருக்கும் பேராபத்து..!

அமெரிக்கா எதிர்பார்க்கும் அளவிற்கு அமெரிக்க நலன்களை இலங்கை அனுமதிக்குமானால் நிச்சயமாக பதற்றம் அதிகரிக்கும் என அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அது உலக மட்டத்தில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றமாக இருக்குமா என்பதை இப்போது கூற முடியாது. ஆனால் இலங்கைக்குள் இருக்கும் கடும் போட்டி அதிகரித்து பதற்றம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கை இராணுவத்தில் அதிபர் ரணில் எடுக்கவுள்ள இரகசிய நகர்வு தொடர்பிலும் அவர் பல விடயங்களை கூறியுள்ளார்.