யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு!

யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இன்று (17) இடம்பெற்றுள்ளது.

பதில் காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க நாடு பூராகவும் போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டமாகிய யுத்திய வேலை திட்டம் காவல்துறையினரால் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள் என பலரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய தினம் யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் காவல்துறையினரால் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட பூஜை வழிபாட்டில் யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட அத்தியட்சகர், யாழ்ப்பாண பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாண காவல்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் குறித்த பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.