பஞ்சர் ஒட்டிய மாணவியை படிக்க வைத்த சிவகார்திகேயன்

நாகபட்டினத்தை சேர்ந்த பள்ளி மாணவி தேவசங்கரி பிளஸ் 2 முடித்ததும் நர்சிங் படிக்க விரும்பினார்.ஆனால் குடும்ப வறுமை காரணமாக தொடர்ந்து அவரால் படிக்க முடியவில்லை.இதனால் அவரது தந்தை நடத்தி வந்த சைக்கிள்  பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரை பற்றிய விடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.இதை அறிந்த சிவகேத்திகேயன் தேவசங்கரியுடன் தொலைபேசியில் உள்ளார். அப்போது தேவசங்கரி தனக்கு நர்சிங் படித்து சேவை செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நாக பட்டினத்தில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்துள்ளார் சிவகார்த்தியேன்.