ஈரானில் இஸ்ரேலியப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இதற்கு பதிலடி வழங்கும் முகமாக ஏவப்பட்ட ஈரானிய ஏவுகணைகளை இஸ்ரேல் இராணுவம் அடையாளம் கண்டதைத் தொடர்ந்து இஸ்ரேலின் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்காரணமாக இஸ்ரேலில் உள்ள மக்கள் தங்குமிடங்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தங்குமிடத்தை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பு நேரம் சுமார் 20 நிமிடங்கள் என இஸ்ரேல் கூறியுள்ளது.
முன்னதாக மேற்கு ஈரானில் இஸ்ரேலியப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியிருந்தது.
இஸ்ரேலியப் படைகள் மேற்கு ஈரானில் தரையிலிருந்து வான் ஏவுதளங்கள் மற்றும் ரேடார்களில் உளவுத்துறை அடிப்படையிலான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஐ.டி.எஃப் மேலும் தெரிவித்திருந்தது.
அத்தோடு ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இஸ்ரேல் மீது Fattah-1 'ஹைப்பர்சோனிக்' ஏவுகணையை ஏவியதாக அறிவித்துள்ளது.
2024 ஒக்டோபர் முதலாம் திகதி இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதலின் போது, அது டசின் கணக்கான Fattah-1 ஏவுகணைகளையும் இஸ்ரேலை நோக்கி ஏவியது.
இருப்பினும், தற்போதைய போரில் Fattah ஏவுகணை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.