ஷ்ரத்தா மாறா, சக்ரா படங்களுக்கு பிறகு நடிக்கும் படம் கலியுகம். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வருகின்றது. பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் ஆர் கே இன்டர்நேஷனல் இன்கார்பரேட் சார்பில் ராமகிருஷ்ணன் தயாரிக்கிறார். இப்படத்தை ப்ரபோத் சுந்தர் இயக்கிவருகிறார்.ஷ்ரத்தாவுடன் கிசோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் முதல் கட்ட பட பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. தற்போது கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட அதிநவீன அரங்கத்தில் இரண்டாம் கட்ட பட பிடிப்பு தொடங்கியுள்ளது. இது தொடர்பில் இயக்குனர் சுந்தர் கூறியதாவது போஸ்ட் அபோக்லிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவுக்கு பின்னரான த்ரில்லராக தயாரிவரும் படம் திறமையான இளைய தலைமுறை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகின்றது.