ரஷ்ய இராணுவத்தின் பயிற்சி நிலையத்தில் துப்பாக்கிசூடு-11 பேர் பலி!

உக்ரைன் அருகே உள்ள ரஷ்ய இராணுவத்தின் பெல்கொரோட் பயிற்சி நிலையத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் காயமடைந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யப் படைகளை வலுப்படுத்துமாறு ஜனாதிபதி விளாடிமிர் புடின் கட்டளையிட்ட அவசர அணிதிரட்டல் நடவடிக்கைக்கு மத்தியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.உக்ரைனுக்கு எதிரான சிறப்பு இராணுவ நடவடிக்கையில் தானாக முன்வந்து பங்கேற்க விருப்பம் தெரிவித்த நபர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் தஜிகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மதம் தொடர்பான தகராறில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் கூறியுள்ளார்.