சுவீடனின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் அடங்குவதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பலர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அதில் சுமார் நான்கு பேர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.
ஓரேப்ரோ நகரில் அமைந்துள்ள கல்வி நிலையத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதோடு, குறித்த துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாக்ஹோமுக்கு மேற்கே 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஓரேப்ரோவில், முறையான கல்வியை முடிக்காத அல்லது உயர்கல்வியில் தொடர்ந்து மதிப்பெண் பெறத் தவறிய இளைஞர்களுக்காக நடத்தப்பட்டு வந்த கல்வி நிலையத்திலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது சுவீடன் வரலாற்றில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு என அந்நாட்டு பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் அடங்குவதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பலர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அதில் சுமார் நான்கு பேர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.
ஓரேப்ரோ நகரில் அமைந்துள்ள கல்வி நிலையத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதோடு, குறித்த துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாக்ஹோமுக்கு மேற்கே 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஓரேப்ரோவில், முறையான கல்வியை முடிக்காத அல்லது உயர்கல்வியில் தொடர்ந்து மதிப்பெண் பெறத் தவறிய இளைஞர்களுக்காக நடத்தப்பட்டு வந்த கல்வி நிலையத்திலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது சுவீடன் வரலாற்றில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு என அந்நாட்டு பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் தெரிவித்துள்ளார்.