இலங்கையில் பேரதிர்ச்சி சம்பவம் : சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாணவர்கள்


15 வயது சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவன் உட்பட  ஐந்து பாடசாலை மாணவர்களை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்;கு ஆளான சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய,பொலிஸார்  சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளானதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான பாடசாலை மாணவி  டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறி தனது காதலனான  மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சிறுமியின் காதலன்  தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று, அங்கு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
 

மேலதிக விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய  காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்தவர்கள், அதே பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர். அவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.