காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்திய திடீர் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
பஹல்காமில் இருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் உள்ள பைசரன் புல்வெளியைப் பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் 27 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தகவல் அறிந்ததும் இந்திய இராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் பொலிஸார் சம்பவ இடம் நோக்கி விரைந்துள்ளதோடு, பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தகவல் அறிந்ததும் இந்திய இராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் பொலிஸார் சம்பவ இடம் நோக்கி விரைந்துள்ளதோடு, பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்
மேலும் மீட்பு பணிக்காக ஹெலிகொப்டரும் அனுப்பிவைக்கப்பட்ட்டுள்ளதோடு, 20க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு பஹல்காம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், சவுதி அரேபியா, இத்தாலி, உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்தி மிகவும் கவலையளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது.
உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும், ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.
இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி புடின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இது 'எந்த நியாயமும் இல்லாத ஒரு கொடூரமான குற்றம். இந்த மிருகத்தனமான குற்றத்திற்கு எந்த நியாயமும் இல்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ரஷ்யா தொடர்ந்து வழங்கும்.
அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதற்கான இந்திய முயற்சிகளில் அதன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், குற்றவாளிகள் தகுந்த தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இறந்தவர்களின் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு உண்மையான அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிக்கவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக புடின் தெரிவித்துள்ளார்.