ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரர் அதிரடியாக கைது : ராஜபக்ஷ குடும்பத்திற்கு மற்றுமொரு பேரிடி



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் சிரந்தி ராஜபக்சவின் சகோதரரான நிசாந்த விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

நிசாந்த விக்ரமசிங்க ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான சேவை நிறுவனத்திற்கான விமான கொள்வனவு தொடர்பிலான முறைகேடுகள் குறித்த விசாரணைகளுக்காக நிசாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பாரியளவு முறைகேடுகள் மோசடிகள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் நிசாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.