தமிழர் தாயகத்தில் நடைபெற்ற மாபெரும் பொங்கல் திருவிழா

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மாபெரும் பொங்கல் திருவிழாவானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1008 பொங்கல் பானையுடன் ,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன்,500 கோலங்களுடன் இடம்பெற்ற பொங்கல் விழாவானது இன்று (08)திருகோணமலையில் இடம்பெற்றது.

பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் (6) இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியையும் மற்றும் படகோட்ட போட்டி, சிலம்பம், கபடி போட்டிகளையும் கிழக்கு மாகாண ஆளுநர் நடத்தியிருந்தார்.

அதன்மூலம் இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மற்றுமொரு சிறப்பம்சமாக பொங்கலை வரவேற்கும் "பொங்கல் திருவிழா" நடத்தி தமிழ் மக்களின் செந்தில் தொண்டமான் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.