ஸ்கொட்லாந்து ஒமிக்ரோன்-நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிகள்!

ஸ்கொட்லாந்தில் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரிமாற்றத்தை மெதுவாக்கும் நோக்கில் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதாவது அனைத்து பெரிய பொது நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. நிகழ்வுகளின் அளவிற்கான வரம்புகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. ஆனால் ஞாயிற்றுக்கிழமை 05 மணிக்கு முதல் இந்த விதி நடைமுறைக்கு வந்தது.இருப்பினும், பல கச்சேரிகள், நாடக நிகழ்ச்சிகள் மற்றும் இசை நகைச்சுவை மேடை தயாரிப்புகள் ஏற்கனவே கட்டுப்பாடுகளுக்கு முன்னதாக இரத்து செய்யப்பட்டன.ஸ்கொட்லாந்தின் டாப் ஃப்ளைட்டில் பொக்ஸிங் டே கால்பந்து போட்டிகள் அதிகபட்சமாக 500 பேர் அமர்ந்திருக்கும் இரசிகர்கள் முன்னிலையில் நடத்தப்படும்.