இலங்கை பெண் அசானி ரசிகர்களுக்கு சரிகமப நிகழ்ச்சியால் ஏற்பட்ட சோகம்- வாய்ப்பு இல்லையா?

தமிழ் சின்னத்திரையில் இரண்டு பாடல் நிகழ்ச்சிகள் பெரிய அளவில் ஒளிபரப்பாகி வருகிறது.

ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர். புதிய தயாரிப்பு நிறுவனம் குளோபல் வில்லேஜர்ஸ் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை முதன்முறையாக தயாரித்தார்கள்.

நேற்று இந்நிகழ்ச்சியின் பைனல் நிகழ்ச்சி நடைபெற்றது. சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஸ்ரீநிதா தேர்வாகி இருந்தார். அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. 

அதேபோல் இன்னொரு பாடல் நிகழ்ச்சி என்றால் அது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சி தான்.

சரிகமப சிறுவர்களுக்கான நிகழ்ச்சியும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து வந்து கலந்துகொண்ட அசானிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. 

அண்மையில் அறிவிக்கப்பட்ட பைனலிஸ்ட் லிஸ்டில் இவர் வருவார் என்று பார்த்தால் இடம்பெறவில்லை. 

ரிக்ஷிதா ஜவஹர்

கில்மிஷா

சஞ்சனா

ருத்ரேஷ் குமார்

கனிஷ்கர்

கவின்

என 6 பேர் இறுதிக்கட்ட நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளனர்.

இலங்கை பெண் கிஷ்மிகா பைனல் லிஸ்டில் இருந்தாலும் அசானி இல்லையே என்பது ரசிகர்களின் பெரிய வருத்தமாக உள்ளது.