விபூதியால் நிரப்பட்ட சாந்தனின் கல்லறை : கண்ணீரில் மூழ்கிய எள்ளங்குளம் VIDEO


சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் திடிரென உயிரிழந்திருந்தார்.


சாந்தனின் உயிரிழப்பு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தழிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

 

குறிப்பாக உயிரோடு வருவாரேன எதிர்பார்த்திருந்த நிலையில் உயிரிழந்த நிலையில் தாயகத்திற்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு இடங்களிலும் அலைகடலெனத் திரண்டு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.


இந் நிலையில் உடுப்பிட்டியில் உள்ள அவரது சொந்த வீட்டில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று தலைவர் பிரபாகரனின் வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.


இதனைத் தொடர்ந்து பெருமளவிலான மக்கள் புடைசூழ நல்லடக்கத்திற்காக உடல் துயிலும் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்ட போது வீதிகளில் திரண்டு மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.


இறுதியாக எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் போராளிகள் எனப் பெருமளவிலானோரின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


குறிப்பாக சாந்தனின் இறுதி தருணங்களில் வழமைக்கு மாறாக அவருடைய பூதவுடல் முழுவதுமாக விபூதியால் நிரப்பப்பட்டிருந்தது.


மேலும் சாந்தனின் வித்துடல் புதைக்கபடப்பட்ட போது அங்கிருந்தவர்கள் விபூதியால் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த முறைமை சற்று வித்தியாசமானதாக காணப்பட்டது.

இவ்வாறு பூதவுடலை அடக்கம் செய்யும் போது அதை முழுமையாக விபூதியால் நிரப்பியது, சாந்தன் குடும்பத்தாரின் கோரிக்கையாகவோ அல்லது மரபாகவோ இருந்திருக்கலாம்.


ஆனால் தமிழ் மக்களுக்காக சாந்தன் சிறையில் வாடும் போதும், அவர் நாட்டுக்கு திரும்புவார் என்ற காத்திருப்பில் இறுதியாக உயிரற்ற உடலாக அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்படும்போதும் அவர் தெய்வமாகவே பார்க்கப்பட்டார்.


''தெய்வம் வீட்டிற்கு வருகிறது வழிவிடுங்கள்'' என்றே அவரது பூதவுடல் வீட்டிற்குள் கொண்டுசெல்லப்பட்டதோடு அவரது உடலை குடும்பத்தினர்  ஆராத்தி  எடுத்திருந்தமையும் பார்ப்பவர்களின் மனதை கலைடையச் செய்திருந்தது.