பாலிவுட்டில் நடிக்க கட்டுப்பாடு விதிக்கும் சாய்பல்லவி

தமிழை விட தெலுங்கு சினிமா பக்கம் அதிக படங்களை நடித்து வரும் சாய் பல்லவி பிசியான நடிகையாக மாறிவிட்டார். இவரின் நடிப்புக்கு தெலுங்கு சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இவரது முதல் படமாகிய பிரேமம் படத்தின் மூலம் தனது அழுத்தமான கேரக்டரினால் மக்கள் மனதை கவர்த்தவர்.இதனால் மலையள திரையுலகில் அதிக வாய்ப்புக்கள் கிடைத்தன. தமிழில் தியா, மாரி 2, என் ஜி கே போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் ராணாவுடன் விராட புருவம், நாக சைத்தவுடன் லவ் ஸ்டோரி உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றது. தற்போது பவன் கல்யானுடன் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் சாய் பல்லவி தனக்கு ஏற்ற கதாப்பாத்திரங்கள் வந்தால் பாலிவுட் படங்களில் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.ஆனால் திரைக்கதை மிகவும் முக்கியமானது. நான் உடனே சென்று பாலிவுட்டில் நடித்துவிட முடியாது . எனக்கு கதை ரொம்ப முக்கியம் என்று கூறியுள்ளார்.