11 கட்சி கூட்டமைப்பில் வெடித்தது பிளவு -வெளியேறுகிறது சுதந்திரகட்சி

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வகையில் கொழும்பில் 11 கட்சிகள் இணைந்து உருவாக்கிய 'மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில்' இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி, விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு அக்கட்சி தயாராகி வருகின்றது.

வேட்புமனுத் தயாரிப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமை மற்றும் அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிலர் தொடர்பில் அக்கட்சியினர் முன்வைத்த ஆட்சேபனையின் அடிப்படையிலேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சி இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளது.

இது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.