உக்ரைன் கார்கிவ் பொலிஸ் அலுவலகம் மீது ரஷ்ய படைகள் ரொக்கெட் தாக்குதல்!

உக்ரைன் கார்கிவ் நகரில் உள்ள பொலிஸ் அலுவலகம் மீது ரஷ்ய படைகள் ரொக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஏழாவது நாளாக தொடரும் உக்ரைன் – ரஷ்ய போரில் கீவ் நகரிலுள்ள தொலைக்காட்சி சமிக்ஞை கோபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.பீரங்கிகள் மூலம் தரைவழி தாக்குதலையும், ஏவுகணைகள் மூலம் வான் வழித் தாக்குதலையும் ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.அதேபோன்று கார்கிவ் நகரில் உள்ள பொலிஸ் அலுவலகம் மீது தாக்குதலை உக்ரைனின் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராசென்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.குறித்த ஏவுகணை தாக்குதலால் அருகில் இருந்த கராசின் தேசிய பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கட்டிடமும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.