வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்திலுள்ள உக்ரேனிய நகரத்தை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளது.
கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள Chasiv Yar மற்றும் Toretsk ஆகிய போர் நிறைந்த நகரங்களில், ரஷ்யர்களின் தீவிர தாக்குதல்களை தங்கள் படைகள் முறியடிப்பதாக கீவ் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உக்ரேனின் கோர்டிட்சியா படை குழு வெளியிட்ட அறிக்கையில்,
பீரங்கிகளின் ஆதரவுடன், எதிரி கிராமடோர்ஸ்க் மற்றும் டோரெட்ஸ்க் பகுதிகளில் எங்கள் நிலைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். அங்கு கடுமையான சண்டை தொடர்கிறது என தெரிவித்துள்ளது.
இவற்றில் டோரெட்ஸ்க் என்பது டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சுரங்க நகரங்களின் வரிசையில் ஒன்றாகும்.
அதே சமயம், தனது படைகள் உக்ரேனின் வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்திலுள்ள நகரரொன்றை கைப்பற்றியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சும் தெரிவித்துள்ளது.
இது ரஷ்ய இராணுவத்தின் முன்னேற்றத்தை குறிக்கும் பிராந்திய ஆதாரமாகும். ஏனெனில், கீவ் மற்ற இரண்டு முக்கிய முன்னணி நகரங்களில் கடுமையான சண்டை ஏற்படும் என முன்னதாக எச்சரிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டிவோரிசினா Dvorichna என்ற நகரத்தை ரஷ்ய படைகள் விடுவித்ததாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. இது போருக்கு முந்தைய காலப்பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட நகரமாகும்.
இதேவேளை தெற்கு ஒடேசா பிராந்தியத்திலும், கிழக்கு கார்கிவ் பிராந்தியத்திலும் இரவு முழுவதும் ரஷ்ய தாக்குதல்களில் 8 பேர் காயமடைந்ததாக அப்பிராந்தியங்களின் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் டோரெட்ஸ்க் என்பது டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சுரங்க நகரங்களின் வரிசையில் ஒன்றாகும்.
அதே சமயம், தனது படைகள் உக்ரேனின் வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்திலுள்ள நகரரொன்றை கைப்பற்றியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சும் தெரிவித்துள்ளது.
இது ரஷ்ய இராணுவத்தின் முன்னேற்றத்தை குறிக்கும் பிராந்திய ஆதாரமாகும். ஏனெனில், கீவ் மற்ற இரண்டு முக்கிய முன்னணி நகரங்களில் கடுமையான சண்டை ஏற்படும் என முன்னதாக எச்சரிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டிவோரிசினா Dvorichna என்ற நகரத்தை ரஷ்ய படைகள் விடுவித்ததாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. இது போருக்கு முந்தைய காலப்பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட நகரமாகும்.
இதேவேளை தெற்கு ஒடேசா பிராந்தியத்திலும், கிழக்கு கார்கிவ் பிராந்தியத்திலும் இரவு முழுவதும் ரஷ்ய தாக்குதல்களில் 8 பேர் காயமடைந்ததாக அப்பிராந்தியங்களின் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.