உக்ரேன் சிறை மீதுரஷ்யா ராணுவம் ஏவுகணை வீசி சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளது.
இராணுவ கூட்டமைப்பான 'நேட்டோ'வில் இணைய உக்ரேன் ஆர்வம் காட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரேன் மீது போர் தொடங்கி தாக்குதல் நடத்தி வருகிறார். இந்த போரில் உக்ரேனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி மற்றும் ஆயுதங்களை வழங்கி வருகிறது.
ரஷ்யாவுக்கு வடகொரியா உதவுகிறது. சீனா மறைமுகமாக உதவுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
போரை உடனடியாக கைவிட வலியுறுத்தி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட உலக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் 3 ஆண்டுகளாக போர் தொடர்கிறது.
இந்தநிலையில் ரஷ்ய ராணுவத்தினர் உக்ரேனை குறிவைத்து நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தென்கிழக்கு சபோரிஜியா பகுதியில் உள்ள சிறைச்சாலையை குறிவைத்து இஸ்கந்தர் ஏவுகணைகளை வீசியும், டிரோன்களை பறக்கவிட்டும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ரஷ்ய ராணுவத்தினர் உக்ரேனை குறிவைத்து நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தென்கிழக்கு சபோரிஜியா பகுதியில் உள்ள சிறைச்சாலையை குறிவைத்து இஸ்கந்தர் ஏவுகணைகளை வீசியும், டிரோன்களை பறக்கவிட்டும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் அந்த சிறைச்சாலை கட்டிடம் கடும் சேதமடைந்துள்ளது. இந்த கோர தாக்குதலில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதோடு, சிறைச்சாலையில் இருந்து பலர் தாக்குதலை பயன்படுத்தி தப்பியோடியுள்ளனர்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதலை உடனடியாக நிறுத்த கெடு விதித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதலை உடனடியாக நிறுத்த கெடு விதித்துள்ளார்.
மேலும் அவர், "அடுத்த 12 நாட்களுக்குள் உக்ரேன் மீதான தாக்குதலை ரஷியா முழுமையாக கைவிட வேண்டும். இல்லையெனில் ரஷ்யா மீது பயங்கர வரிவிதிப்பு விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.