உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தலைமையகத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்!

மத்திய கீவ்வில் உள்ள உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தலைமையகத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.பாதுகாப்பு உளவுத்துறை தலைமையக கட்டடத்தில் இருந்து கறுப்பு புகை எழுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய பின்னர், இன்று காலை ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களால் அதன் இராணுவ கட்டளை மையங்கள் சில தாக்கப்பட்டதாக உக்ரைன் கூறுகிறது.