ஒரே இரவில் 36 ஏவுகணைகளை ஏவிய ரஸ்யா..! உக்ரைன் கொடுத்த பதிலடி

ஒரே இரவில் உக்ரைன் மீது ரஸ்யா பாரிய தாக்குதலை நடத்தியதாக அதிபர் ஜெலென்ஸ்கி (Zelensky) கூறியுள்ளார்.

ஆக்கிரமிப்பாளர் தொடர்ந்து நம் நாட்டை அச்சுறுத்தி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இரவு எதிரிகள் ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கினார்கள் அதில் 36 ஏவுகணைகள் ஏவப்பட்டது.

பதிலடியாக அவற்றில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும் தெரிவித்தார்.

அவை முக்கியமான பொருட்களின் மீது மோசமான தாக்குதல்களளை ஏற்படுத்தியுள்ளன.

இவை பயங்கரவாதிகளின் வழக்கமான தந்திரோபாயங்கள் என்று ஜெலென்ஸ்கி (Zelensky) சமூக ஊடகங்களில் கூறியுள்ளார்.