உக்ரேனின் இரண்டு கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு - மறுக்கிறது உக்ரேன்

உக்ரேனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்பிர்ன் மற்றும் நோவோலெக்சாண்டிவ்கா கிராமங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால் இதற்கு உக்ரேன் இராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக உக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த மே மாதம் முதல் உக்ரேன் தலைநகரான கார்கிவ் மீது ரஷ்யா தனது தாக்குதலை வலுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.