வேல்ஸில் முடிவுக்கு வரும் சுய தனிமைப்படுத்தல் விதிகள்!

வேல்ஸில் கடைகள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வத் தேவை மற்றும் சுய தனிமைப்படுத்தல் விதிகள் இன்று (திங்கட்கிழமை) முடிவுக்கு வருகின்றது. ஆனால் உடல்நலம் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்புகளில் முகக்கவசம் அணிவது இன்னும் சட்டப்பூர்வ தேவையாக இருக்கும்.சிலர் இந்த நடவடிக்கையை வரவேற்றனர். மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.நிறுவனங்கள் தங்கள் பணியிடங்களில் கொவிட் அபாயத்தை மதிப்பிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.