ரிஷப் பாண்ட் செய்த ஏமாற்று வேலை! அவுட்டே இல்லாமல் அவுட் ஆகி வெளியேறிய தென்னாபிரிக்கா வீரர்

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பாண்ட் கேட்ச் பிடித்தது ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தென்னாபிரிக்கா அணிக்களுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்றுக்கு முன்தினம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ஓட்டங்களும் தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 229 ஓட்டங்களும் எடுக்க நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கட் இழப்புக்கு 85 ஓட்டங்கள் எடுத்து 58 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடி வருகின்றது. இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணிமுதல் இன்னிங்ஸில் பேட்டின் ஆடிக் கொண்டிருந்த போது அந்த அணியின் முக்கிய வீரரான Rassie vander Dussen விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட்டிடம் கேட்ச் பிடித்து அவுட் ஆகினார். ஆனால் அது ரீஎப்பிசோல்டில் பந்து கீழ் பட்டு பிடித்திருந்தது அப்பட்டமாக தெரிந்து தெரிந்தது. நடுவர் இதனை சரியாக கவனிக்காமல் அவுட் கொடுத்ததால் தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் இது குறித்து நிர்வாகத்துடன் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.