இந்தியா-உக்ரைன் விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்!

இந்தியா-உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது.இது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்கள் மற்றும் இருக்கைகளுக்கான எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது.தேவைகளுக்கு ஏற்ப எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.  தேவைகளுக்கு ஏற்ப விமான சேவைகளை அதிகரிக்க இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைனில் போர் பதற்றம் நிலவுவதை தொடர்ந்து  அந்நாட்டில் இருக்கும் இந்தியர்களை நாடு திரும்புமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.