நேற்று கொத்து கொத்தாக எலும்புக்கூடுகள் மீட்பு : கொடூரத்தின் வெளிப்பாடு

நேற்று கொத்து கொத்தாக எலும்புக்கூடுகள் மீட்பு : கொடூரத்தின் வெளிப்பாடு

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 213 மனித எலும்புக்கூடுகள் முழுமை யாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் 42 வது நாளாக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் செ.லெனின்குமார் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வுக்கு பின்னர் ஊடகங்களுக்குகருத்து தெரிவித்த சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா

புதிதாக 9 மனிதஎலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டது. 7 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. இதுவரை மொத்தமாக 231 மனித எலும்
புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டது. இன்றைய தினம் அகழ்ந்துஎடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் மொத்தமாக 213 எலும்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலில்வைக்கப்பட்டுள்ளது. அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்  என்றார்

இதேநேரம் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி தளத்தில் நடைபெற்று வரும் விசாரணை குறித்த விரிவான அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் முன்னேற்றம் மற்றும் குறிப்பிடத்தக்க சவால்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதுடன் நீதி அமைச்சர், பொலிஸ் மாஅதிபர்,பாதுகாப்புஅமைச்சர், இராணுவத் தளபதி, உயர்கல்விஅமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோருக்கு 16 பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும்பணியில், புதைகுழி தளம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவத் துறை மற்றும் காணாமல் போனோர் அலுவலகம், நீதிவான்கள், தடயவியல் நிபுணர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் சந்திப்புகள் இடம்பெற்றன.

அறிக்கையிடும் காலப்பகுதியில், 200 க்கும்மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், முதற்கட்ட கண்டுபிடிப்புகள் 90மூக்கும் மேற்பட்ட உடல்கள், சாத்தியமான நீதிக்கு புறம்பான கொலைகளைக் குறிக்கும் வகையில் புதைக்கப்பட்டிருந்தன என்பதைக்குறிக்கின்றன.

போதுமான தடயவியல், மானுடவியல்மற்றும் தொல்பொருள் நிபுணர்கள் இல்லாதமை, மேம்பட்ட கார்பன்டேட்டிங் முறைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் மற்றும் மரபணு பகுப்பாய்வில் உள்ள சவால்கள் உள்ளிட்ட நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் முக்கிய இடைவெளிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.

நிதியுதவியில் தாமதங்கள் மற்றும் சட்டஅமுலாக்க அதிகாரிகளால் ஏற்படும் மிரட்டல்கள், பொறுப்புக்கூறல் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு கவலைகளை எழுப்பியுள்ளது.
இதனிடையே, இந்த அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முக்கிய பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்துள்ளது.

அதன்படி, மனித புதைகுழி விசாரணைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்குதல், மேம்பட்ட தடயவியல் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவத்தைப் பெறுதல், காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு மரபணுவங்கியை நிறுவுதல், அரசு அதிகாரிகளால்கடுமையான குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடுப்பதற்கான ஒரு சுயாதீன அலுவலகத்தை உருவாக்குதல் போன்ற பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

அத்துடன், சாட்சிகள் அல்லது ஊடகப்பணியாளர்களை அச்சுறுத்துவதை சட்ட அமுலாக்கம் தவிர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

விசாரணையை திறம்பட முடிக்கவும்,இடத்தில் புதைக்கப்பட்டு என்புக்கூடுகளாக மீட்கப்பட்டவர்களில் குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்யவும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் அவசரத் தேவையும்இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது