கிளிநொச்சி ஓ.எம்.பி அலுவலகத்தின் முன் கடிதங்களை தீயிட்டுக் கொளுத்திய மக்கள்

கிளிநொச்சியில் காணாமல்போனவர்களை பதிவு செய்யும் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி ஓ.எம்.பி அலுவலகத்தில் காணாமல்போனவர்களை பற்றிய பதிவுகளை மேற்கொள்ளும் செயற்பாடுகள் இன்று (08-07-2023) காலை ஆரம்பமாகியது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பெற்றோர் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

குறித்த அலுவலகத்தினால் பதிவுகளுக்கு அழைக்கப்பட்டிருந்த அழைப்பு கடிதங்களையும் அலுவலகத்தின் முன்பாக போட்டு மக்கள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

குறித்த அலுவலக பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.