10 மாத குழந்தை பாலியல் பலாத்காரம்-கொடூர தந்தை கைது

தனது10 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி கலேகன நகருக்கராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொத்தல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வர்ணப்பூச்சு தொழிலை மேற்கொண்டு வரும் இவர், மதுபோதையில் வந்து குழந்தையை வீட்டின் பின்புறம் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.