யாழ்ப்பாணத்தில் ரணில்! வெடித்தது பாரிய போராட்டம்: குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

ரணில் விக்ரமசிங்கவின் யாழ் விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பழைய பூங்கா அருகில் தற்போது பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வடக்கிற்கு மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க இன்று (04) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொண்டுள்ளார்.

இந்த நிலையில் ரணிலின் வருகையை எதிர்த்து மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்களை கச்சேரி பழைய பூங்கா அருகில் காவல்துறையினர் வீதித் தடைகளை அமைத்து தடுத்து வைத்துள்ளனர்.

அத்துடன் ரணிலின் விஜயத்தை முன்னிட்டு யாழில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ். மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதோடு, அப்பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.