ரணில் வல்லவர் கிடையாது: பொருத்தமான தலைமை நானே - சரத் பொன்சேகா புகழாரம்

முகக் கண்ணாடியைப் பார்க்கும் போது நாட்டுக்குப் பொருத்தமான தலைமைத்துவம் தனக்குத் தென்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பூகொடை - மண்டாவல கிராமத்தில் நேற்று (13) நடைபெற்ற ரணவிரு அஞ்சலி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், இப்போது அனைவரும் பாதுகாப்புப் படையினரையும் மறந்துவிட்டார்கள். அவர்களின் பங்களிப்புகளையும் மறந்துவிட்டார்கள். இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றதையே பலரும் மறந்துவிட்டார்கள்.

வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய விடுவிக்கப் போனால் பாதுகாப்பு குழறுபடிகள் ஏற்படும்.