பிள்ளையான் கைது தொடர்பில் சாணக்கியன் வெளியிட்ட பகிரங்க தகவல்..!

நான் கூறித் தான் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். 

ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர், மேலும் கூறுகையில், "கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில், பிள்ளையானால் தாக்கல் செய்யப்பட்ட மான நஷ்ட வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அசாத் மௌலானாவால் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ஈஸ்டர் தாக்குதல்களில் பிள்ளையான் தொடர்புபட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

எனவே, அவ்வாறு சொல்லப்பட்டது பிள்ளையான் இந்த குண்டு வெடிப்பு தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர் என நான் கூறியதை வைத்து தான் எனக்கு வழக்கு தொடரப்பட்டிருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.