கொழும்பில் குவிந்த போராட்டக்காரர்களால் பதற்றம் : பொலிஸாருடன் வாக்குவாதம்


கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸாருடன் போராட்டக்காரர்கள் முரண்பட்டதால் பதற்றநிலை ஏற்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள அடிமை தொழிலாளர் சட்ட திருத்தங்களை உடன் மீளப்பெறவும், தொழிலாளர்களின் ஓய்வூதிய பணத்தை (நுPகு மற்றும் நுவுகுஐ) கொள்ளையடிக்க வேண்டாம் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்திருந்ததோடு, கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் பெயரில் தொழிலாளர்களின் பணத்தை கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, இன்றைய தினம் தொழிற்சங்கங்கள் சிலவற்றின் உறுப்பினர்கள் கொழும்பின் சில வீதிகளுக்கு பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஒல்கோட் மாவத்தை, யோர்க் மாவத்தை, பேங்க் வீதி, லோட்டஸ் வீதி செத்தம் வீதி போன்றவற்றிற்குள் நுழைவதைத் தடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.