யாழில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்.ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் 

இந்த கவனயீர்ப்பு போராட்மானது இன்று (01.07.2023) காலை 9 மணியளவில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு வரும் காணியின் வாயிலில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அந்த பகுதியில் குடியிருக்கும் பெண்கள், குழந்தைகள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதனையடுத்து போராட்டம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது “மக்களுக்கு மனநோய் வேண்டாம்”, “மின்காந்த அலை, காற்றுக்கு நஞ்சு”,“மக்களை உடல், உள ரீதியாகப் பாதிப்புக்கு உள்ளாக்காதீர்கள்”, “எங்கோ போகும் இடி மின்னலை எம்மை நோக்கி இழுக்க வேண்டாம்”, “நகர்த்து நகர்த்து தொடர்பாடல் கோபுரத்தை நகர்த்து” போன்ற சுலோகங்கள் அடங்கிய பாதாதைகளை தாங்கியும், கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், அப்பகுதியில் குறித்த தொலைத் தொடர்புக் கோபுரத்திற்கு நெருக்கமான குடிமனைகளில் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் நோயாளர்களும் காணப்படுவதனால் பொது மக்களுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் தொலைத் தொடர்புக் கோபுரத்தை இடமாற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்பாடு செய்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே இந்த கவனயீர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்படுகிறது என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.