பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிராகரிக்க கோரி மட்டக்களப்பில் பேரணி!


பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (09) மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கு அருகாமையில் இருந்து காந்தி பூங்கா வரைக்கும் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களுடன் கிழக்கு அபிவிருத்தி மையம் இணைந்து நடாத்திய இந்தப் பேரணியானது மட்டக்களப்பு காந்தி பூங்காவை வந்தடைந்ததும், அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோசமிட்டபடியும், பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.