இலங்கையின் பிரபலமான இரண்டு அரசியல்வாதிகள் அடுத்து வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்து சர்ச்சைக்குரிய நபர்களான இருவரே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையால் குறித்த இருவரும் கைது செய்யப்படவுள்ளனர்.
குறித்த இரண்டு அரசியல்வாதிகளுக்கும் எதிராக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.