நிலவும் மின்சார நெருக்கடி; அமைச்சின் செயலாளருக்கு நாமல் ராஜபக்ச ஆலோசனை!!!

நாட்டில் தற்போது மின்சார நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில் நாட்டில் உள்ள பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது

இந் நிலையில் போக்குவரத்து மற்றும் மின்சார செலவுகளைக் குறைப்பதற்காக அமைச்சில் அத்தியாவசிய அதிகாரிகளை மாத்திரம் பணியமர்த்தவும் ஏனையோரை தேவைப்பட்டால் வீட்டிலிருந்து கடமைகளை நிறைவேற்றவும் பொது நிர்வாகத் திணைக்களத்தின் ஒப்புதலை கோருமாறு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.