2015 ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.
காலி பெலிகஹ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்த ஜனாதிபதி,
ஜனாதிபதித் தேர்தல் சரியான நேரத்தில் நடத்தப்படும். சர்வஜன வாக்கெடுப்புக்குப் பின்னரும் ஜனநாயகம் தொடர்ந்து இயங்கும் ஒரே நாடு இலங்கை மட்டுமேயாகும்.
இந்த நிலைமையை பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதால் அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை.
மேலும், அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் போது குறித்த விடயத்தில் அனுபவம் வாய்ந்தவரான சட்டத்தரணி கே. என் சோக்சியிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது சட்டத்தரணி சோக்சி உயிருடன் இல்லாத காரணத்தால் இந்த விடயத்தை சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன் படி, தனது கவனக்குறைவால் தற்போதைய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.